sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கேரள அதிகாரிகளை கண்டித்து தீர்மானம்

/

கேரள அதிகாரிகளை கண்டித்து தீர்மானம்

கேரள அதிகாரிகளை கண்டித்து தீர்மானம்

கேரள அதிகாரிகளை கண்டித்து தீர்மானம்


ADDED : டிச 08, 2024 06:08 AM

Google News

ADDED : டிச 08, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : முல்லைப்பெரியாறு அணைக்கு தளவாட சாமான்கள் கொண்டு செல்வதை தடுக்கும் கேரள அதிகாரிகளை கண்டித்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்படுகிறது.

கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் உத்தமபாளையத்தில் நடந்தது. விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்தார்.

மாவட்டம் முழுவதும் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து எடுக்கும் தண்ணீரின் அளவை குறைத்து கம்பம் பள்ளத்தாக்கில் நடவு செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும். இதை வலியுறுத்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் குழு, கலெக்டரை சந்தித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணைக்கு தளவாட சாமான்களை கொண்டு சென்ற தமிழக நீர்வளத் துறையின் லாரிகளுக்கு அனுமதி மறுத்த கேரள அதிகாரிகளை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் விஜயராஜன் ( கருங்கட்டான்குளம் ), நாராயணன் (கம்பம் ), ராஜா ( சின்னமனூர் ) உள்ளிட்ட சீலையம்பட்டி , கோட்டூர், வீரபாண்டி விவசாய சங்க தலைவர்களும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us