sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முதியோர் உதவித்தொகை வழங்க கோரி தீர்மானம்

/

முதியோர் உதவித்தொகை வழங்க கோரி தீர்மானம்

முதியோர் உதவித்தொகை வழங்க கோரி தீர்மானம்

முதியோர் உதவித்தொகை வழங்க கோரி தீர்மானம்


ADDED : அக் 04, 2024 07:03 AM

Google News

ADDED : அக் 04, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்ட ஊராட்சிக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெற உத்தரவு பெற்றும் கிடைக்காதவர்களுக்கு ஆணை பிறப்பித்த நாள் முதல் உதவித்தொகை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் பீரித்தா தலைமையில் கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் ராஜபாண்டியன், செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவித்தொகை பெற பலருக்கும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் உதவித்தொகை வழங்கப்படவில்லை. முதியோர்கள் பலர் இறந்தும் விட்டனர். உதவித்தொகை பெறுவதற்கு எப்போது ஆணை வழங்கினார்களோ, அத்தேதியில் இருந்து உதவித் தொகை வழங்க வேண்டும் என சிறப்பு தீர்மானத்தை துணைத்தலைவர் கொண்டு வந்தார். கவுன்சிலர்கள் ஆதரவுடன் அந்த சிறப்பு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் பெரியகுளம் தாசில்தார் அலுவலக அதிகாரிகள், கனிமவளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us