sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உயரும் சண்முகாநதி அணை நீர் மட்டம்

/

உயரும் சண்முகாநதி அணை நீர் மட்டம்

உயரும் சண்முகாநதி அணை நீர் மட்டம்

உயரும் சண்முகாநதி அணை நீர் மட்டம்


ADDED : மே 30, 2025 03:30 AM

Google News

ADDED : மே 30, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: மேகமலை பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் சண்முகா நதி அணையின் நீர் மட்டம் மெள்ள மெள்ள உயர்ந்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்து வருகிறது.

மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு பகுதிகளில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சண்முகா நதி அணை நீர்மட்டம் மெள்ள மெள்ள உயர்ந்து வருகிறது.

அணையின் முழு கொள்ளளவு 52.5 அடியாகும். தற்போது அணை நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது.

அணைக்கு விநாடிக்கு 12 கன அடி வரத்து உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு 41 அடியாக இருந்தது. தொடர்ந்து சாரல் இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெள்ள உயர்ந்து வருகிறது.

நீர்வளத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, 'தென்மேற்கு பருவ மழை காலங்களில் சண்முகா நதி அணைக்கு தண்ணீர் வரத்து இருக்காது .

வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டுமே அணை நிரம்பும். ஆனால் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழையால் நீர் மட்டம் மெள்ள மெள்ள உயர்ந்து வருகிறது.

இதே நிலை நீடித்தால் 2 வாரங்களில் அணை முழு கொள்ளளவை எட்டும். தொடர்ந்து அக்டோபரில் வடகிழக்கு பருவ மழையும் பெய்ய உள்ளதால், இனி அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவிலேயே இருக்கும்,' என்கின்றனர்.






      Dinamalar
      Follow us