sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்

/

தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்

தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்

தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்


ADDED : டிச 27, 2024 07:21 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே பத்திரகாளிபுரத்தில் இருந்து மாற்றுப் பாதையாக மீனாட்சிபுரம் செல்லும் ரோட்டில் உள்ள ஓடைப் பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போடி அருகே பத்திரகாளிபுரம், விசுவாசபுரம் மெயின் ரோடு வழியாக இரண்டரை கி.மீ., துாரத்தில் மீனாட்சிபுரம் அமைந்து உள்ளது. பத்திரகாளிபுரத்தில் இருந்து மாற்றுப் பாதையில் ஒன்றரை கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது மீனாட்சிபுரம். இதனால் அரை கி.மீ., துாரம் சுற்றிச் செல்வது குறைகிறது. இந்த ரோட்டில் உள்ள ஓடைப் பாலத்தில் தடுப்புச்சுவர் முழுவதும் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் வேகமாக வருபவர்கள், தடுப்புச்சுவர் இல்லாதது தெரியாத நிலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. தெரு விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் இந்த ரோட்டில் மக்கள் வர தயக்கம் காட்டி வருகின்றனர். விளைப் பொருட்களை வாகனங்களில் கொண்டு வர விவசாயிகள் சிரமப்படுகின்றனர். விவசாயிகள், மக்கள் பயன் பெறும் வகையில் ஓடைப் பாலத்தில் தடுப்புச்சுவர் அமைத்திட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us