sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரோடு மறியல்

/

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரோடு மறியல்

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரோடு மறியல்

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரோடு மறியல்


ADDED : ஜன 17, 2025 05:39 AM

Google News

ADDED : ஜன 17, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், லட்சுமிபுரம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ரோடு மறியல் செய்தனர். ஆண்டிபட்டி - முதலக்கம்பட்டி ரோட்டில் வைகை ஆற்று பாலம் அருகே புதிதாக கல்குவாரி துவக்கப்பட்டுள்ளது. கல்குவாரி சுற்றிலும் விளைநிலங்கள் அதிகம் இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று மாலை குவாரியில் வெடிவைத்து கற்களை உடைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள முதலக்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் 50, அதனை படம் பிடித்து தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் லட்சுமணனை சிலர் அடித்து காயப்படுத்தினர். சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குவாரி அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி முதலக்கம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் வைகை ஆற்றுப்பாலம் அருகே ரோடு மறியல் செய்தனர்.

தேனி கூடுதல் எஸ்.பி., சுகுமார், ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் ரோடு மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்தினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us