sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குவாரிகளை தற்காலிகமாக மூட ஆர்.டி.ஓ., பரிந்துரை

/

குவாரிகளை தற்காலிகமாக மூட ஆர்.டி.ஓ., பரிந்துரை

குவாரிகளை தற்காலிகமாக மூட ஆர்.டி.ஓ., பரிந்துரை

குவாரிகளை தற்காலிகமாக மூட ஆர்.டி.ஓ., பரிந்துரை


ADDED : ஆக 28, 2025 06:06 AM

Google News

ADDED : ஆக 28, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம், : காமயகவுண்டன்பட்டியில் இயங்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் நிர்வகிக்கும் குவாரிகளை தற்காலிகமாக மூட உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., செய்யது முகம்மது, கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிற்கு பரிந்துரை செய்துள்ளதாக, உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன் தெரிவித்தார்.

காமயகவுண்டன்பட்டியில் குவாரி பிரச்னையில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் கம்பம் நகர் செயலாளர் சசிக்குமார் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் நேற்று காலை அக்கட்சியினருடன் பேசிய உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன், 'சட்டம் ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி காமயகவுண்டன்பட்டியில் இயங்கி வரும் ஆறு குவாரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, நான் செய்த பரிந்துரையை ஏற்று, ஆர்.டி.ஓ., செய்யது முகமது கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்வதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொலை நடந்தது முதல் இப்போது வரை குவாரிகள் செயல்படவில்லை. இறந்தவருக்கு நிவாரணம் தர அரசிற்கு பரிந்துரை செய்ய உள்ளோம்.', என்றார். தாசில்தாரின் உத்தரவாதத்தை தொடர்ந்து தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் சங்கிலிவேல், மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் அக்கட்சியினர் சசிக்குமார் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us