ADDED : நவ 13, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசால் ஊரக திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசிநாள் நவ.,20 ஆகும்.
தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவிக்கலாம். தேர்வு டிச.14ல் நடக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.