sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியகுளம் பகுதியில் அமோகமாக நடக்கும் மணல் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியத்தால் அழியும் இயற்கை வளம்

/

பெரியகுளம் பகுதியில் அமோகமாக நடக்கும் மணல் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியத்தால் அழியும் இயற்கை வளம்

பெரியகுளம் பகுதியில் அமோகமாக நடக்கும் மணல் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியத்தால் அழியும் இயற்கை வளம்

பெரியகுளம் பகுதியில் அமோகமாக நடக்கும் மணல் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியத்தால் அழியும் இயற்கை வளம்


ADDED : பிப் 04, 2024 03:24 AM

Google News

ADDED : பிப் 04, 2024 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-பெரியகுளம், : பெரியகுளம் தாலுகாவில் அதிகாரிகள் கண்டு கொள்ளததால் செலும்பு ஆறு, சிற்றோடைகளில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. ஓடைகளில் சிறுக, சிறுக சேகரித்து தனியார் நிலத்தில் குவித்து டிராக்டரில் கடத்தல் தொடர்கிறது.

பெரியகுளத்தை சுற்றி வராகநதி, பாம்பாறு, செலும்பாறு, கல்லுாறு போன்ற ஆறுகளும், நுாற்றுக்கண்கான சிற்றோடைகள் செல்கின்றன. ஆறு, சிற்றோடைகள் மூலம் வரும் நீரை பயன்படுத்தி விவசாயம் அமோகமாக நடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் இப் பகுதியில் நடந்த மணல் கொள்ளையால் நீர் நிலைகளில் மணற்பாங்கு குறைந்து வறண்டு இருந்தது.

அதன்பின் மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையால் ஓரளவிற்கு மணல், மண் கடத்தில் குறைந்து இருந்தது. மணல் தட்டுப்பாடு, கெடுபிடிகளால் கட்டுமான பணி செய்வோர் அனைவரும் எம்.சாண்ட், பி. சாண்ட் ஆகியவற்றை பயன்படுத்தினர். இச் சூழலில் கடந்த சில மாதங்களாக பெரியகுளம் பகுதியில் மணல் கடத்தல் அமோகமாக நடக்கிறது. மாவட்டத்தில் மணல் குவாரிகளே இல்லாத நிலையில் பல இடங்களில் நடக்கும் கட்டுமானங்களில் திருட்டு மணல் பயன்படுத்துகின்றனர். ஒரு டிராக்டர் மணல் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர்

உதாரணத்திற்கு சில நாட்களுக்கு முன் பெரியகுளம் கும்பக்கரை செல்லும் ரோட்டில் உள்ள செலும்பு ஆற்றில் அடையாளம் தெரியாத நபர்கள் மூடைகளில் மணலை அள்ளி காளியம்மன் கோயில் அருகே தரிசு நிலங்களில் குவிக்கின்றனர். இதனை யூனிட் கணக்கில் விலை பேசி இரவில் டிராக்டரில் கடத்தி செல்கின்றனர். ஒரு சில கும்பல் ஓடைகளில் மணல் அள்ளி ஒரு மூடை மணல் ரூ.80 வீதம் டிராக்டரில் 100 மூடை, 150 மூடை என ஏற்றி தேவைப்படும் இடத்தில் இரவில் கொட்டி செல்கின்றனர். மணல் கொள்ளையை தடுக்க வருவாய் துறை, கனிம வளத்துறை,

போலீசார் யாரும் கண்டு கொள்ளாததால் விருப்பம் போல் இரவிலும், அதிகாலையிலும் மணல் கொள்ளை தாராளமாக நடக்கிறது. இது போன்ற மணல் கொள்ளை மாவட்ட அளவில் பரவலாக நடக்கிறது. மணல் கடத்தலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us