sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தடுப்பணைகளை சேதப்படுத்தி ஓடையில் மணல் திருட்டு

/

தடுப்பணைகளை சேதப்படுத்தி ஓடையில் மணல் திருட்டு

தடுப்பணைகளை சேதப்படுத்தி ஓடையில் மணல் திருட்டு

தடுப்பணைகளை சேதப்படுத்தி ஓடையில் மணல் திருட்டு


ADDED : ஆக 14, 2025 02:56 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே நாகலாபுரம் மல்லிங்கர்சாமி கரடு நீர்வரத்து ஓடையில் மழை நீர் தடுப்பணைகளை சேதப்படுத்தி மணல் திருடி வருவதால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

போடி ஒன்றியம், நாகலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மல்லிங்கர்சாமி கரடு ஓடை. தொடர் மழை, 18 ம் கால்வாய் நீர் திறந்து விடும் நிலையில் மல்லிங்கர்சாமி கரடு ஓடையில் நீர் வரத்து ஏற்படும். இதன் மூலம் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் அடைந்து வந்தன. தற்போது நாகலாபுரம் மல்லிங்கர்சாமி கரடு ஒட்டி உள்ள ஓடை பகுதியின் இருபுறமும் தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். ஓடை பகுதியில் கட்டப்பட்டு உள்ள மழை நீர் தடுப்புகளை உடைத்து மணல் திருடி வருகின்றனர். இதனால் தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலையில் ஏற்படுகிறது. நிலங்களில் தண்ணீர் தேக்க, கிணறுகளில் நீர்மட்டம் உயர்த்த முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். தொடர் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை இல்லை. விவசாயிகள் பயன் பெறும் வகையில் மல்லிங்கர்சாமி கரடு பகுதியின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர் தடுப்புகளை சீரமைத்து மணல் திருட்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us