/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துாய்மை பணியாளர்கள்
/
கூடலுார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துாய்மை பணியாளர்கள்
கூடலுார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துாய்மை பணியாளர்கள்
கூடலுார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துாய்மை பணியாளர்கள்
ADDED : ஆக 14, 2025 02:53 AM

கூடலுார்: வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு பிடித்தம் செய்த தொகையை பெற்றுத் தருவதில் தீர்வு ஏற்படாததால் இரண்டாவது முறையாக கூடலுார் நகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்
கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் 35க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு தினக்கூலியாக ஒப்பந்ததாரர் மூலம் ரூ.400 வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் வருங்கால வைப்பு நிதிக்காக இவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை மற்றும் நிறுவனம் செலுத்த வேண்டிய தொகை பல ஆண்டுகளாக இவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இதனைப் பெற்றுத் தரக் கோரி தூய்மை பணியாளர்கள் பலமுறை உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாதிப்பிற்கு உள்ளான தூய்மை பணியாளர்கள் ஆக. 7ல் கூடலுார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆக.11க்குள் தங்களது பிரச்சனை தீர்வு காணப்படும் என நகராட்சி கமிஷனர் கோபிநாத் உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். ஆனால் தற்போது வரை தீர்வு கிடைக்காததால் இரண்டாவது முறையாக நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கமிஷனர் அலுவலகத்திற்கு வராததால் சுகாதார ஆய்வாளர் விவேக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்பந்த நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்து தாங்களுக்கு கிடைக்க வேண்டிய பண பலன்களை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதால் கலைந்து சென்றனர்.