sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பள்ளி மாணவர்கள் ஆதார் எண் புதுப்பிக்கும் பணி தீவிரம்

/

பள்ளி மாணவர்கள் ஆதார் எண் புதுப்பிக்கும் பணி தீவிரம்

பள்ளி மாணவர்கள் ஆதார் எண் புதுப்பிக்கும் பணி தீவிரம்

பள்ளி மாணவர்கள் ஆதார் எண் புதுப்பிக்கும் பணி தீவிரம்


ADDED : ஜன 13, 2025 04:22 AM

Google News

ADDED : ஜன 13, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பள்ளி மாணவர்களின் ஆதார் எண் புதுப்பிக்கும் பணிகளை மாவட்ட கல்வித்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்படுகிறது. பள்ளிப் படிப்பை முடித்த பின்னரும் அவர்களுக்கு உயர் கல்வியிலும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் பல மாணவர்கள் ஆதார் புதுப்பிக்காமலும், வங்கி கணக்குகளுடன் இணைக்காமலும் உள்ளனர். இப்பணியை விரைந்து முடிக்க பள்ளிக் கல்வித்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், '9, 10ம் வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அரசு வழங்குகிறது. சிலர் திறனறித் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் தேர்வாகி உயர்கல்வி படிக்கும் வரை உதவித்தொகை பெறுகின்றனர். சிலர் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காமலும், சிலர் ஆதார் புதுப்பிக்காமலும் உள்ளனர். ஆதார் இணைத்தல், புதுப்பித்தல் பணிக்காக வட்டாரம் வாரியாக பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி வருகிறோம்.', என்றனர்.






      Dinamalar
      Follow us