ADDED : மார் 20, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: மறவபட்டியை சேர்ந்தவர் அழகுராஜா,உசிலம்பட்டி நக்கலபட்டியை சேர்ந்த முருகன் ஆகியோர் மறவபட்டி வஷாகுளம் கண்மாய் அருகே டிராக்டரில் மண் அள்ளும் இயந்திர உதவியுடன் மணல் அள்ளினர்.
ஆண்டிபட்டி எஸ்.ஐ.,விஜய் ஆனந்த், போலீசார் டிராக்டர் மண் அள்ளும் இயந்திரத்தை கைப்பற்றினர். போலீசார் அழகு ராஜாவை கைது செய்தனர். முருகனை தேடி வருகின்றனர்.

