sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இயற்கை காளான் கிலோ ரூ.500க்கு விற்பனை

/

இயற்கை காளான் கிலோ ரூ.500க்கு விற்பனை

இயற்கை காளான் கிலோ ரூ.500க்கு விற்பனை

இயற்கை காளான் கிலோ ரூ.500க்கு விற்பனை


ADDED : அக் 16, 2024 04:17 AM

Google News

ADDED : அக் 16, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் சமீபத்தில் பெய்த மழையால் வயல் வரப்புகள், மேய்ச்சல் நிலங்கள், வனம் சார்ந்துள்ள பகுதிகளில் இயற்கை காளான் முளைத்து வருகிறது. மழை பெய்த நாளில் இரவில் காளான்கள் முளைக்கும். முளைத்த ஓரிரு நாளில் பயன்படுத்தாவிட்டால் கெட்டுவிடும். மழைக்கு மறுநாள் காலையில் குறிப்பிட்ட இடங்களை குறிவைத்து தேடி செல்பவர்களுக்கு காளான்கள் கிடைக்கும்.

சிலர் இதனை பகுதி நேர தொழிலாக மேற்கொண்டு தினமும் 2 முதல் 5 கிலோ வரை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இயற்கை காளான்களில் அதிக சுவையும், சத்துக்களும் அதிகம் என்பதால் கிராமம் மற்றும் நகர் பகுதியில் இயற்கை காளான்களுக்கு மவுசு அதிகம். அக்.,நவ.,மாதங்களில் மட்டுமே இயற்கை காளான்கள் முளைக்கும். இதனை பலரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். ஆண்டிபட்டி பகுதியில் தற்போது அம்பு காளான், அவல் காளான், குடை காளான், முட்டைக் காளான் வகையைச் சேர்ந்த இயற்கை காளான்கள் தரத்திற்கு தக்கபடி கிலோ ரூ.500 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us