ADDED : டிச 06, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி,: பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரியில் இயற்கை வள மேலாண்மை துறை சார்பில் உலக மண்தினம் கொண்டாடப்பட்டது.
துறை மாணவர்கள் சார்பில் கல்லுாரி வளாகத்தில் ஊர்வலம் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜாங்கம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கருத்தரங்கம் நடந்தது. அதில் மண் வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.