ADDED : ஜன 11, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரியில் நுண்நிலைக் கற்பித்தல் திறன்கள் என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடர்கள் உறவின்முறைத்தலைவர்ராஜமோகன் தலைமை வகித்தார்.
கல்லுாரி செயலாளர் குணசேகரன், இணைச் செயலாளர் மணிமாறன் உறவின்முறை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் மதுரை புனித ஜஸ்டின் கல்வியியல் கல்லுாரி பேராசிரியர் மீனாட்சி, நுண்கலை கற்பித்தல் முக்கியத்துவம் பற்றி பேசினார். கருத்தரங்கை கல்லுாரி முதல்வர் பியூலா ராஜினி ஒருங்கிணைத்தார்.