ADDED : நவ 07, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை இடுக்கடிலாட் தெரு பிரவீன்குமார் 28. இவர் டூவீலரில் உறவினரை அழைத்துக் கொண்டு அரசு பஸ் டெப்போ முன்பு டூவீலரை நிறுத்தி விட்டு, உறவினரை பஸ்சில் அனுப்பி வைத்தார். திரும்பி பார்த்தபோது 5 நிமிடம் இடைவெளியில் டூவீலர் திருடு போனது. பிரவீன் குமார் புகாரில் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
தொடரும் திருட்டு: பெரியகுளம் தென்கரை, வடகரை பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் 30க்கும் அதிகமான டூவீலர்கள் திருடு போயுள்ளது. இதில் வடகரை பகுதியில் திருட்டு அதிகம். ஒருவரை கூட போலீசார் கைது செய்யவில்லை. டி.எஸ்.பி., நல்லு தனிக்கவனம் செலுத்தி டூவீலர் திருட்டை தடுக்க வேண்டும்.

