sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குழந்தை திருமணங்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

/

குழந்தை திருமணங்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

குழந்தை திருமணங்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

குழந்தை திருமணங்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


ADDED : மார் 17, 2025 06:27 AM

Google News

ADDED : மார் 17, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : 'மாவட்டத்தில் பள்ளி கோடை விடுமுறையில் நடக்கும் குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும். இதற்காக கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அளவில் அதிக குழந்தை திருமணங்கள் நடக்கும் மாவட்டங்களில் தேனி மாவட்டமும் ஒன்றாகும். மாவட்டத்தில் ஆண்டிபட்டி, வருஷநாடு, பெரியகுளம், போடி வட்டாரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் அதிக குழந்தை திருமணங்கள் நடப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த குழந்தை திருமணங்களால் பாதிக்கப்படுவது பள்ளி மாணவிகளே ஆவர். 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடிக்கும் மாணவிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இந்த மாணவிகள் கருவுற்று, சிகிச்சைக்கு வரும் போது தான் குழந்தைகள் திருமணம் நடந்திருப்பது கண்டறியப்படுகிறது. இதனை தடுக்க கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோடை விடுமுறையில் அதிகம்


பள்ளிகள் கோடை விடுமுறையான ஏப்., மே., மாதங்களில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இதனை கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் தடுக்க முன்வர வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் குழந்தை திருமணம் நடக்காத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளின் எதிர்காலம், கனவுகள் சிதைக்கப்படுகின்றன. மேலும் அவர்கள் உடல் அளவில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் சூழல் உருவாகிறது. குழந்தை திருமணங்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us