sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குழாய் உடைந்து வீணாகும் சோத்துப்பாறை கூட்டுக்குடிநீர்

/

குழாய் உடைந்து வீணாகும் சோத்துப்பாறை கூட்டுக்குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் சோத்துப்பாறை கூட்டுக்குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் சோத்துப்பாறை கூட்டுக்குடிநீர்


ADDED : ஜூன் 29, 2025 12:12 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்,: வடுகபட்டியில் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் குழாய் மீண்டும் இரு இடங்களில் உடைந்து குடிநீர் சாக்கடையில் கலந்து வீணாகிறது.

பெரியகுளம் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வடுகபட்டி, மேல்மங்கலம்,ஜெயமங்கலம், சில்வார்பட்டி ஊராட்சிகளுக்கு தினமும் பேரூராட்சிக்கு 3 லட்சம் லிட்டரும், ஊராட்சிகளுக்கு தலா 2 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்க வேண்டும். ஆனால் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 50 ஆயிரம் லிட்டர் வழங்குவதற்கே குடிநீர் வாரியம் திணறுகிறது. இதனால் ஜெயமங்கலம் ஊராட்சியில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

சாக்கடையில் கலக்கும் குடிநீர்: வடுகபட்டியிலிருந்து மேல்மங்கலம் செல்லும் ரோடு பழைய சினிமா தியேட்டர் பஸ்ஸ்டாப் அருகே இடதுபுறம் கடந்த மாதம் கடைசியில் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் குழாய் உடைந்து, சாக்கடையில் கலந்தது. தினமலர் செய்தி எதிரொலியாக புதிய இரும்பு குழாய் இணைத்து குடிநீர் வாரியம் சீரமைத்தது. தற்போது சரிசெய்யப்பட்ட குழாய் மேற்புறம் நான்கு அடி இடைவெளியில் இரு இடங்களில் குழாய் உடைந்து,

குடிநீர் சாக்கடையில் கலந்தும், பஸ்ஸ்டாப் முழுவதும் பயணிகள் நிற்கும் இடம் முழுவதும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. குடிநீர் வாரியம் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us