sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சோத்துப்பாறை அணை பாதுகாப்பு செயல் விளக்கம்

/

சோத்துப்பாறை அணை பாதுகாப்பு செயல் விளக்கம்

சோத்துப்பாறை அணை பாதுகாப்பு செயல் விளக்கம்

சோத்துப்பாறை அணை பாதுகாப்பு செயல் விளக்கம்


ADDED : ஆக 01, 2025 02:07 AM

Google News

ADDED : ஆக 01, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: சோத்துப்பாறை அணை பாதுகாப்பு குறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

பெரியகுளம் சோத்துப்பாறை அணை 2001ல் கட்டிமுடிக்கப்பட்டு பாசனத்திற்கு திறக்கப்பட்டது. 2865 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அணையின் மொத்த உயரம் 126.38 அடி, நேற்று 52.32 அடியாக இருந்தது. தற்போது பெரியகுளம் குடிநீருக்கு வினாடிக்கு 3 கன அடி வினியோகிக்கப்படுகிறது. அணைகள் பாதுகாப்பு சட்டம் 2021-ன் படி ஒவ்வொரு அணைக்கும் அதன் அவசரகால செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். இதன் பேரில் சோத்துப்பாறை அணை இயற்கை பேரிடரினாலோ, வேறு ஏதோ காரணங்களால் உடைந்து வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால்,

எந்தெந்த துறைக்கு என்னென்ன பொறுப்புகள் உள்ளது. இது குறித்து கிண்டி அண்ணா பல்கலை பேராசிரியர்களால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு குறித்து அனைத்து துறை அலுவலர்கள் விவரிப்பது சம்பந்தமான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்சித்சிங் தலைமையில் நடந்தது.

நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரலட்சுமி, மஞ்சளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன், உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உட்பட பிற துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us