sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய 22 ஆட்டோக்கள் பறிமுதல் திடீர் சோதனைக்கு எஸ்.பி., உத்தரவு

/

உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய 22 ஆட்டோக்கள் பறிமுதல் திடீர் சோதனைக்கு எஸ்.பி., உத்தரவு

உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய 22 ஆட்டோக்கள் பறிமுதல் திடீர் சோதனைக்கு எஸ்.பி., உத்தரவு

உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய 22 ஆட்டோக்கள் பறிமுதல் திடீர் சோதனைக்கு எஸ்.பி., உத்தரவு


ADDED : மார் 03, 2024 12:08 AM

Google News

ADDED : மார் 03, 2024 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனியில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 22 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரவில் ஆட்டோ பயணிகளிடம் வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. சிலர் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படுதவதாகவும் , ஆட்டோக்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் பொருத்தியும், ரோட்டில் மற்றவர்களுக்கு இடையூராக இயக்கப்படுவதாகவும் எஸ்.பி., சிவபிரசாத் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதனையெடுத்து நேற்று முன்தினம் இரவு ஆட்டோக்களை சோதனையிட எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டார்.

தேனி இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் நேருசிலை அருகே சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக இயக்கப்பட்ட ஆட்டோக்களை சோதனை செய்ததில் பெர்மிட், தகுதி சான்று, ஆர்.சி., புத்தகம், ஒட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்கள் இன்றியும், மது போதையில் ஆட்டோக்கள் இயக்கியது போன்றவற்றிற்காக 22 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து இது போன்ற திடீர் வாகன தணிக்கை செய்ய எஸ்.பி., உத்தரவிட்டுள்ளாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

திடீர் சோதனையால் நேற்று குறைந்த அளவிலான ஆட்டோக்கள் மட்டும் நகர்பகுதியில் இயக்கப்பட்டன.

இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டது.






      Dinamalar
      Follow us