ADDED : டிச 06, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய பணியாளர்களுக்கு நன்றிதெரிவித்து சிறப்பு கூட்டம் ஊராட்சி தலைவர் சந்திரா தலைமையில் நடந்தது.
ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், குடிநீர்மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் மக்கள் நல பணியாளர்களை நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.
ஊராட்சி துணைத் தலைவர் பிரியா, செயலாளர் சின்னச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.