ADDED : ஜன 20, 2024 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: தை மாத முதல் வெள்ளியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.
போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.