/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பங்குனி உத்திர திருவிழா கோலாகலம் கோயில்களில் சிறப்பு வழிபாடு
/
பங்குனி உத்திர திருவிழா கோலாகலம் கோயில்களில் சிறப்பு வழிபாடு
பங்குனி உத்திர திருவிழா கோலாகலம் கோயில்களில் சிறப்பு வழிபாடு
பங்குனி உத்திர திருவிழா கோலாகலம் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஏப் 12, 2025 06:29 AM

கம்பம் : மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கம்பம் வேலப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சுவாமிக்கு பால், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல பொருள்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நூற்றுக்கணக்கான பெண்கள் பாலாபிஷேகத்திற்கு பால் வழங்கினார்கள். சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில், காமயகவுண்டன்பட்டி சண்முகநாதர் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று முருகனை தரிசித்தனர். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன், அறக்கட்டளை நிர்வாகி உதயகுமார் உள்ளிட்ட அறக்கட்டளை உறுப்பினர்கள் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
போடி: ஐயப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி பூஜை ஐயப்ப பக்த சபை தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது. செயலாளர் சேதுராம், துணைச் செயலாளர் சன்னாசி, பொருளாளர் கருப்பையா முன்னிலை வகித்தனர். கணபதி ஹோமத்துடன், ஐயப்பனுக்கு 108 சங்குகளால் அபிஷேகம், சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை கள் நடந்தது.
பெரியகுளம்: பங்குனி உத்திரம் சுவாமி ஐயப்பன் பிறந்த தினமாக கொண்டாடப்படுகிறது. பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில் சுவாமி ஐயப்பனுக்கு மஞ்சள், சந்தனம், நெய் உட்பட 16 வகையான பூஜை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சரண கோஷங்கள் பாடினர். ராஜ அலங்காரத்தில் ஐயப்பன் காட்சியளித்தார்.
பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பாலசுப்பிரமணயர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மனை வழிபட்டனர்.