sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குண்டு எறிதலில் தங்கம் வென்ற மாணவருக்கு மாதம் ரூ.6 ஆயிரம்

/

குண்டு எறிதலில் தங்கம் வென்ற மாணவருக்கு மாதம் ரூ.6 ஆயிரம்

குண்டு எறிதலில் தங்கம் வென்ற மாணவருக்கு மாதம் ரூ.6 ஆயிரம்

குண்டு எறிதலில் தங்கம் வென்ற மாணவருக்கு மாதம் ரூ.6 ஆயிரம்


ADDED : நவ 29, 2024 06:38 AM

Google News

ADDED : நவ 29, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தடகள போட்டிகளில் குண்டு எறிதலில் தங்கம் வென்ற மாணவருக்கு மாத ஊக்கத் தொகை ரூ.6 ஆயிரம் தேனி மாநில தடகள சங்கம் வழங்கியது.

பள்ளி மாணவர்களை தடகள போட்டிகளில் சாதிக்க துாண்டும் வகையில் 'மிஷன் ஒலிம்பிக் மெடல்' திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை ரூ.6 ஆயிரம் வீதம் ஓராண்டுக்கு மாநில தடகள சங்கம் வழங்குகிறது. இந் நிதி உதவி பெறும் மாணவர் தகுதியை வளர்த்து கொள்ளவும், ஒலிம்பிக்கில் சாதிக்கவும் நிதியை பயன்படுத்தலாம். அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி சாதித்தால் ஊக்கத்தொகை தொடரும். இத் திட்டத்தில் மாநில அளவில் 7 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப்பள்ளி 10 ம் வகுப்பு மாணவர் ஜஸ்வந் மாநில தடகள போட்டியில் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் குண்டு எறிதலில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இவருக்கு 'மிஷன் ஒலிம்பிக் மெடல்' திட்டத்தின் கீழ் மாநில தடகள சங்கம் ரூ.6 ஆயிரத்தை ஊக்கத் தொகை வழங்கியது. நேற்று மாணவருக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் பிரபாகர் தலைமை வகித்தார். மாவட்ட தடகள செயலர் அஜய் கார்த்திக்ராஜா, உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் ஆகியோர் ஊக்கத் தொகைக்கான காசோலையை மாணவரிடம் வழங்கினார்கள். தலைமையாசிரியை கலாராணி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us