/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சர்வதேச கராத்தே போட்டி மாணவர்கள் சாதனை
/
சர்வதேச கராத்தே போட்டி மாணவர்கள் சாதனை
ADDED : மே 05, 2025 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் :  கோவாவில் உலக அளவில் நடந்த கராத்தே போட்டியில் கூடலுார் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
உலக அளவிலான கராத்தே போட்டி கோவாவில் நடந்தது.
இந்தியா, மலேசியா, இலங்கை, நேபாளம், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் கூடலுாரில் இருந்து பயிற்சியாளர் ரஞ்சித் தலைமையில் சென்ற மாணவர்கள் விளையாடினர். வித்தியாஸ்ரீ, லிபின், பிரணிபித்திவ் ஆகியோர் தலா 2 தங்கப்பதக்கங்களும், ஹரிணிஷ் ஒரு தங்கப் பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர். மாணவர்களையும், பயிற்சியாளரையும் பெற்றோர்கள், பொது மக்கள் பாராட்டினர்.

