/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் வெயிலை விரட்டிய கோடைமழை
/
மாவட்டத்தில் வெயிலை விரட்டிய கோடைமழை
ADDED : ஏப் 05, 2025 05:37 AM

பெரியகுளம்: மாவட்டத்தில் கோடை வெயிலை விரட்டும் வகையில் தொடர்ந்து கோடை மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரை வெயிலின் தாக்கம் நீடித்தது.
இதனால் மதியம் ரோடுகளில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. காலையிலே இவ்வளவு கடுமையாக வெயில் தாக்கம் இருப்பதாக மக்கள் புலம்பினர்.
வெயிலின் தாக்கத்திற்கு ஆறுதலாக ஏப்.2, ஏப். 3 மாவட்டத்தில் பரவலாக இரவில் மழை பெய்து குளிர்ந்த காற்று வீசியது.
இந்நிலையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு பெரியகுளத்தில் சாரல் மழையாக வந்த அடுத்து 10 நிமிடத்தில் கனமழையாக மதியம் 1:20 வரை கனமழை பெய்தது. மாலையிலும் கனமழை தொடர்ந்தது.
இதனால் கோடைவெயிலின் தாக்கம் குறைந்தது. மாலையில் தேனியில் விட்டு, விட்டு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கம்பத்தில் நேற்று மாலை 6:00 மணிக்கு பெய்த மழை இரவு 7:00 மணிவரை தொடர்ந்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது இதனால் மெயின்ரோட்டில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.