sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுருளி அருவி ரோடு சேதம் கழிவு நீரால் சுகாதாரக் கேடு

/

சுருளி அருவி ரோடு சேதம் கழிவு நீரால் சுகாதாரக் கேடு

சுருளி அருவி ரோடு சேதம் கழிவு நீரால் சுகாதாரக் கேடு

சுருளி அருவி ரோடு சேதம் கழிவு நீரால் சுகாதாரக் கேடு


ADDED : அக் 19, 2024 04:49 AM

Google News

ADDED : அக் 19, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுாரில் இருந்து சுருளி அருவி செல்லும் ரோட்டில் கழிவு நீர் ஓடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் ரோடு சேதமடைந்து வருகிறது.

கூடலுாரில் இருந்து கருநாக்கமுத்தன்பட்டி வழியாக சுருளி அருவிக்கு 9 கி.மீ., தூர ரோடு உள்ளது. இதன் துவக்கப் பகுதியில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் ரோடு அடிக்கடி குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

கேரளாவில் இருந்து சுருளி அருவிக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கேரள சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இவ்வழியே செல்கின்றன. மேலும் விளைநிலங்களுக்கு அதிகமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன. கழிவுநீரோடை வசதி ஏற்படுத்த பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன் இப்பகுதியில் தற்காலிகமாக சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து வாகன ஓட்டிகளை சிரமப்படுத்தும்.






      Dinamalar
      Follow us