/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறில் ஜீப் கவிழ்ந்து தமிழக மாணவர்கள் காயம்
/
மூணாறில் ஜீப் கவிழ்ந்து தமிழக மாணவர்கள் காயம்
ADDED : நவ 21, 2025 01:28 AM

மூணாறு: மூணாறு அருகே, நுாறடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்ததில், தமிழக பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.
தமிழகத்தின், கரூர், ஆண்டான்கோவிலில், ஆங்கில மீடியம் பள்ளியை சேர்ந்த 8, 9, 10ம் வகுப்புகளில் படிக்கும், 95 மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்ட குழுவினர், இரு பஸ்களில் மூணாறு சுற்றுலா வந்தனர்.
அவர்கள் மூணாறில் இருந்து நேற்று காலை, 10க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் மாட்டுபட்டி சென்றனர். அதில், ஒரு ஜீப்பை, மூணாறு அருகே சொக்கநாடு எஸ்டேட் டிரைவர் முனியசாமி, 37, ஓட்டினார். அதில், 9 மாணவர்கள் இருந்தனர்.
மாட்டுபட்டியில் தனியார் பள்ளி அருகே முன்னால் சென்ற பஸ்சை முந்த முயன்ற ஜீப், கட்டுப்பாட்டை இழந்து நுாறடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில், ரிதீஷ், 14, பலத்த காயமடைந்தார். மேலும், சசிநாதன், 12; சஞ்சய், 14; சபரி, 14, உள்ளிட்டோர் சிறிய காயங்களுடன் தப்பினர்.
மூணாறில் டாடா மருத்துவமனையில் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். ரிதீஷ் மேல் சிகிச்சைக்காக, ஆலுவா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.

