ADDED : ஜன 21, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:L   புதுச்சேரியைச் சேர்ந்தவர் அமிர்தா பிரேம்குமார் 44. சேலத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். அவர், பள்ளி மாணவ, மாணவிகள் 90 பேர் கொண்ட குழுவுடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தார்.
பழைய மூணாறில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். அங்கு அறையில் தங்கியிருந்தபோது  நேற்று முன்தினம் நள்ளிரவில் அமிர்தாபிரேம்குமாருக்கு  திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.

