sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான ஊதிய பட்டியல் தயாரிப்பு தாமதம் விரைந்து முடிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

/

அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான ஊதிய பட்டியல் தயாரிப்பு தாமதம் விரைந்து முடிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான ஊதிய பட்டியல் தயாரிப்பு தாமதம் விரைந்து முடிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான ஊதிய பட்டியல் தயாரிப்பு தாமதம் விரைந்து முடிக்க ஆசிரியர்கள் கோரிக்கை


ADDED : ஜன 30, 2025 06:23 AM

Google News

ADDED : ஜன 30, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதிய பட்டியல் இதுவரை தயாராகாததால் ஊதியம் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பணியை விரைவாக முடித்து ஊதியம் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட ஆலோசகத்தலைவர் பாண்டித்துரை கூறியதாவது: மாவட்டத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 39 உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள், அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 18 முதல் 20 தேதிக்குள் ஊதிய பட்டியல் 'IFHRMS' முலம் தயாரிக்கப்படும். ஆனால், இந்த மாதத்திற்கான ஊதியபட்டியல் இதுவரை தயாரிக்கப்படவில்லை.

இதனால் மாதந்தோறும் வழங்கும் தேதியில் ஊதியம் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஆசிரியர்கள், அலுவலர்கள் வீட்டு வாடகை, இ.எம்.ஐ., மருத்து செலவு என பல செலவீனங்கள் உள்ளது.

ஊதியபட்டியல் தயாரிப்பு தாமதம் பலரை பாதிக்கும். உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கு இம்மாதத்திற்கான ஊதியம் உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us