sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உதவி பெறும் ஆசிரியர்கள் மூலம் துவக்கபள்ளிகளில் கற்பித்தல் பணி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி

/

உதவி பெறும் ஆசிரியர்கள் மூலம் துவக்கபள்ளிகளில் கற்பித்தல் பணி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி

உதவி பெறும் ஆசிரியர்கள் மூலம் துவக்கபள்ளிகளில் கற்பித்தல் பணி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி

உதவி பெறும் ஆசிரியர்கள் மூலம் துவக்கபள்ளிகளில் கற்பித்தல் பணி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி


ADDED : ஜூலை 17, 2025 11:59 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் டிட்டோஜாக் கூட்டமைப்பு ஆசிரியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கைதானதால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 1726 ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமித்து கற்பித்தல் பணி தொய்வு இன்றி நடந்தது.'' என மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நாகலட்சுமி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மொத்தம் தொடக்க பள்ளிகளில் 2661 பேர் பணிபுரிகின்றனர். நேற்று 1726 பேர் பணிக்கு வந்தனர். 115 ஆசிரியர்கள் முன் விடுப்பு எடுத்துள்ளனர். அதில் 820 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் முன்னேற்பாடாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை நியமித்து தொடக்க பள்ளியில் கற்பித்தல் பணி தொய்வின்றி நடந்தது. இதனால் பாதிப்பும் இல்லை.', என்றார். மாவட்டத்தில் 820 பேர் முன் அனுமதி இன்றி விடுமுறையில் எடுத்த நிலையிலும், மறியலில்பங்கேற்று கைதானவர்கள் வெறும் 220 பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்தும் பட்டியல் தயாரித்து அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us