/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் : மக்கள் குறை கேட்பேன் : காங்., வேட்பாளர் தஸ்லீம் உறுதி
/
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் : மக்கள் குறை கேட்பேன் : காங்., வேட்பாளர் தஸ்லீம் உறுதி
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் : மக்கள் குறை கேட்பேன் : காங்., வேட்பாளர் தஸ்லீம் உறுதி
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் : மக்கள் குறை கேட்பேன் : காங்., வேட்பாளர் தஸ்லீம் உறுதி
ADDED : செப் 30, 2011 01:30 AM
தேனி : தேனி மக்களின் குறைகளை வாரம் ஒருமுறை கேட்டு தீர்ப்பேன், அனைத்து மக்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என காங்., வேட்பாளர் தஸ்லீம் கூறினார்.
தேனி காங்., வேட்பாளர் தஸ்லிம் மிகுந்த அரசியல் அனுபவம் பெற்றவர். ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட இளைஞர் காங்., பொதுச்செயலாளர், தேனி மாவட்ட இளைஞர் காங்., தலைவர், தேனி நகர காங்., தலைவர் போன்ற பல பதவிகளில் இருந்துள்ளார். இவரது மனைவி ரோசம்மாள் தேனி நகராட்சி 22வது வார்டு கவுன்சிலர். தஸ்லீம் கூறியதாவது: ஆருண் எம்.பி.,முயற்சியால் காரணமாக தேனியில் 85 கோடி ரூபாய் குடிநீர் திட்டப்பணிகள் நடக்கின்றன. 5 கோடி ரூபாய் செலவில் 500 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை பணிகள் 42 கோடி ரூபாய் செலவில் நடக்கின்றன. புது பஸ்ஸ்டாண்ட் பணிகள் 13 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது.
58 லட்சம் ரூபாய் செலவில் நடந்த எரிவாயு தகனமேடை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தேனியில் சென்டர் மீடியம் அமைக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவரது வழிகாட்டுதல்படி நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். 85 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் குடிநீர் திட்டத்தில் நீரை நல்ல முறையில் சுத்திகரித்து மினரல் வாட்டர் தரத்தில் அனைவருக்கும் தரமான குடிநீர் வழங்குவேன். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகளவு நல்ல தரமான வாழ்க்கை அமையும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவேன். அராஜகம் இல்லாமல் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் எளிய முறையில் நடந்து கொள்வேன். மக்களுக்கு நல்ல முறையில் பணியாற்றுவேன். பாதாள சாக்கடை பணிகளை முடிந்ததும் நகர் முழுவதும் சிறப்பாக ரோடு அமைத்து கொடுப்பேன். வீரப்ப அய்யனார் கோயிலுக்கு ரோடு, பாலம் போக்குவரத்து வசதி செய்வேன். வாரம் ஒருமுறை மக்கள் குறை கேட்பேன்,' என்றார்.