sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

எலும்பு வலுவிழக்கும் நோயினால் 50 வயதை தாண்டிய பெண்கள் பாதிப்பு : மருத்துவ கருத்தரங்கில் தகவல்

/

எலும்பு வலுவிழக்கும் நோயினால் 50 வயதை தாண்டிய பெண்கள் பாதிப்பு : மருத்துவ கருத்தரங்கில் தகவல்

எலும்பு வலுவிழக்கும் நோயினால் 50 வயதை தாண்டிய பெண்கள் பாதிப்பு : மருத்துவ கருத்தரங்கில் தகவல்

எலும்பு வலுவிழக்கும் நோயினால் 50 வயதை தாண்டிய பெண்கள் பாதிப்பு : மருத்துவ கருத்தரங்கில் தகவல்


ADDED : ஜூலை 27, 2011 10:38 PM

Google News

ADDED : ஜூலை 27, 2011 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : எலும்பு வலுவிழக்கும் நோயினால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என தேனியில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ கல்வி கருத்தரங்கம் முதல்வர் வள்ளிநாயகம் தலைமையில் நடந்தது. டாக்டர் துளசிராம் வரவேற்றார். ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் முனியப்பன் பேசியதாவது: எலும்பு மஜ்ஜை குறைவினால் வரும் இந்நோய் (ஆஸ்டியோ போரோசிஸ்) ஏற்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பாக பெண்கள் இந்நோயால் பாதிக்கின்றனர்.



சத்துக்குறைவான உணவு, மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, குழந்தை பெறுதல் போன்றவற்றால் ஏற்படும் சத்துக்குறைபாட்டால் பெண்கள் இந்நோய்க்கு ஆளாகின்றனர். சிறிய விபத்தில் இவர்கள் சிக்கினாலும் பெரிய பாதிப்பு ஏற்படும். விபத்து ஏற்படாவிட்டாலும் எலும்புகள் உடையலாம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது கடினம். சத்தான உணவு சாப்பிடுதல், கால்சியம் சத்துக்குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல், உடலின் பிற உறுப்புகள் நல்ல முறையில் செயல்படும் வகையில் பார்த்துக் கொள்ளுதல், கை, கால் எலும்புகளில் சிறிய வலி தெரிந்தாலும் டாக்டர்கள் ஆலோசனை பெறுதல் ஆகியவற்றால் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்,'இவ்வாறு அவர் பேசினார். பேராசிரியர்கள் ராமர், சுப்பிரமணியன், பிரபாகரன், மைத்ரேயி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.










      Dinamalar
      Follow us