sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குரூப் 2 நேர்முக தேர்வு முடிவு வெளியிட வலியுறுத்தல்

/

குரூப் 2 நேர்முக தேர்வு முடிவு வெளியிட வலியுறுத்தல்

குரூப் 2 நேர்முக தேர்வு முடிவு வெளியிட வலியுறுத்தல்

குரூப் 2 நேர்முக தேர்வு முடிவு வெளியிட வலியுறுத்தல்


ADDED : ஆக 11, 2011 11:18 PM

Google News

ADDED : ஆக 11, 2011 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : ஐகோர்ட் தீர்ப்பினை ஏற்று குரூப் 2 நேர்முகதேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என தேர்வு எழுதியவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கடந்த 2010 ஏப்., 11 ல் குரூப் 2 தேர்வுகள் நடந்தன. கடந்த ஜன. 2011ல் முடிவுகள் வெளியானது. தொடர்ந்து நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதற்கிடையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் அடிப்படையில் முன்பு அறிவிக்கப்பட்டதை விட கூடுதல் பணியிடங்களை நிரப்ப கடந்த தி.மு.க., அரசு முடிவு செய்தது. இதற்கு தேர்வு எழுதியவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஐகோர்ட்டில் முறையிட்டனர். தேனியை சேர்ந்த சி.சிவமுருகன்(தேர்வில் வெற்றி பெற்றவர்) கூறியதாவது: குரூப் 2 தேர்வின்போது நிர்ணயித்த பணியிடங்களை மட்டும் நிரப்ப வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். கோர்ட்டும், தேர்வு அறிவிப்பின் போது நிர்ணயித்த பணியிடங்களை மட்டும் நிரப்ப வேண்டும் என தீர்ப்பு வழங்கி உள்ளது. இப்பணியிடங்களுக்கு ஏற்கனவே நேர்முக தேர்வு முடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரசு தீர்ப்பினை ஏற்று நேர்முகதேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us