ADDED : பிப் 12, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : வடுகபட்டியில் திருவருட்பிரகாச வள்ளலார் கோயிலில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நடந்தது. காலை 11:45 மணி தைப்பூச ஜோதியினை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
'ஓதாது உணர்ந்த உத்தமர் வள்ளலார்' என ஆசிரியர் முத்துக்குமாரும், புலவர் ராஜரத்தினம் பேசினர்.வருடம் முழுவதும் மதியம்1:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. தலைவர் ரத்தினவேல், செயலாளர் வீரபுத்திரன், பொருளாளர் வாசுமணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

