sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஒரு லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் வேளாண்துறை சுணக்கம்

/

ஒரு லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் வேளாண்துறை சுணக்கம்

ஒரு லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் வேளாண்துறை சுணக்கம்

ஒரு லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் வேளாண்துறை சுணக்கம்


ADDED : ஜன 08, 2024 04:50 AM

Google News

ADDED : ஜன 08, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம், : மாவட்டத்தில் 2023 -- 2024ல் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து வேளாண் துறை வேகம் இல்லாததால் மரக்கன்றுகள் தேக்கமடைந்துள்ளன.

தமிழக அரசின் நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி நடவு செய்ய அரசு திட்டமிட்டது. இதற்கென ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் சின்னமனுார், கம்பம், உத்தமபாளையம், போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, கடமலை மயிலை என எட்டு வட்டாரங்களில் 2023--2024ல் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஒரு வட்டாரத்திற்கு 20 ஆயிரம் இலக்கு


தேக்கு, பலா, குமிழ், மகாகனி, சவுக்கு மரக்கன்றுகள் அந்தந்த வனத்துறை அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டது. வரப்பு ஓரங்கள், ஒடைகள், பாதை ஓரங்கள் என கிடைக்கும் இடங்களில் நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. விரும்பும் விவசாயிகள் ஆதார், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை அந்தந்த வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் வழங்கி மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என உதவி இயக்குனர்கள் அறிவித்தனர்.

ஆனால் அறிவிப்போடு சரி யாரும் இந்த பணியை முன்னெடுக்கவில்லை. இதனால் மரக்கன்றுகள் நடவு நடைபெறவில்லை. கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் உதவி இயக்குனர்கள் மரம் வளர்ப்பு திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us