sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சாரல் மழை, பனியுடன் குளிர் வீசுவதால் மேகமலைக்கு பயணிகள் வருகை குறைந்தது

/

சாரல் மழை, பனியுடன் குளிர் வீசுவதால் மேகமலைக்கு பயணிகள் வருகை குறைந்தது

சாரல் மழை, பனியுடன் குளிர் வீசுவதால் மேகமலைக்கு பயணிகள் வருகை குறைந்தது

சாரல் மழை, பனியுடன் குளிர் வீசுவதால் மேகமலைக்கு பயணிகள் வருகை குறைந்தது


ADDED : அக் 23, 2024 05:13 AM

Google News

ADDED : அக் 23, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: மேகமலை பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து, பனிமூட்டம், குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

மேகமலையில் மூணாறுக்கு நிகராக சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பசுமையான தேயிலை தோட்டங்களும், ஹைவேவிசில் ஆரம்பித்து மணலாறு வரை ரோட்டை ஒட்டியே நீண்டு செல்லும் மணலாறு நீர் தேக்கமும், மலைமுகடுகளை தொட்டு செல்லும் மேக கூட்டங்களும், தண்ணீர் அருந்த அணை பகுதிக்கு வரும் யானை, காட்டு மாடுகள் கூட்டமும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும்.

ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சாரல் மழை பெய்து வருகிறது.

சில நாட்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது. தற்போது அதிக குளிர் நிலவுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டங்களும் உள்ளன.

இதனால் தினமும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இரவங்கலாறு, வெண்ணியாறு , மகாராசா மெட்டு, தூவானம் பகுதிகள் வெறிச்சோடி கிடக்கிறது.

இங்குள்ள அணைகளில் சேகரமாகும் தண்ணீரை பயன்படுத்தி தேவைக்கேற்ப காலை, மாலை நேரங்களில் சுருளியாறு மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us