sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நோயாளர் உடன் வருவோர் தங்கும் கட்டடங்கள் வீண்

/

நோயாளர் உடன் வருவோர் தங்கும் கட்டடங்கள் வீண்

நோயாளர் உடன் வருவோர் தங்கும் கட்டடங்கள் வீண்

நோயாளர் உடன் வருவோர் தங்கும் கட்டடங்கள் வீண்


ADDED : அக் 06, 2024 03:51 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : தேனி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நோயாளர்கள் உடன் வருபவர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட கட்டடங்கள், பல ஆண்டுகளை கடந்தும் பயன்பாடு இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு, உடன் வருபவர்கள் தங்குவதற்கென மத்திய மாநில அரசுகள் பங்குத் தொகையில் படுக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப நோயாளர் உடன் வருபவர்கள் தங்க புதிய கட்டடங்கள் கட்டப்பட்டது.

மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டது.

கட்டடங்கள் கட்டி பல ஆண்டுகளை கடந்து திறந்தும், பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. நல்ல நிலையில் உள்ள கட்டடங்கள் செயல்படுவதில் என்ன பிரச்னை என தெரியவில்லை.

நோயாளர் உடன் வருபவர்கள் தங்கவில்லை என்றாலும், வேறு பயன்பாட்டிற்காவது பயன்படுத்த இணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us