sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 காதர் பாட்சா கண்மாயில் மழை நீரை தேக்க முடியாத அவலம் அணைக்கரைப்பட்டி விவசாயிகள் பரிதவிப்பு

/

 காதர் பாட்சா கண்மாயில் மழை நீரை தேக்க முடியாத அவலம் அணைக்கரைப்பட்டி விவசாயிகள் பரிதவிப்பு

 காதர் பாட்சா கண்மாயில் மழை நீரை தேக்க முடியாத அவலம் அணைக்கரைப்பட்டி விவசாயிகள் பரிதவிப்பு

 காதர் பாட்சா கண்மாயில் மழை நீரை தேக்க முடியாத அவலம் அணைக்கரைப்பட்டி விவசாயிகள் பரிதவிப்பு


ADDED : டிச 19, 2025 05:40 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி, போடி அருகே அணைக்கரைப்பட்டி காதர்பாட்சா கண்மாய் பகுதியை தனி நபர்கள் ஆக்கிரமித்தும், ஷட்டர், தடுப்பணைகள் சேதம் அடைந்து உள்ளதால் கண்மாயில் மழைநீரை முழுவதும் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கோம்பை பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது காதர் பாட்சா கண்மாய். இக்கண்மாய் நம்பி முத்துக்கோம்பை, சின்னமுடக்கு, பெரிய முடக்கு உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 500 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் மா, இலவம், தென்னை உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர்.

இக்கண்மாய் மூலம் 250 ஏக்கர் நேரடி பாசனமும், 300 ஏக்கர் மறைமுக பாசன வசதி பெறுகின்றன. தற்போது கண்மாய் தனி நபர்கள் ஆக்கிரமிப்பால் 10 ஏக்கர் கூட இல்லாத அளவிற்கு சுருங்கி உள்ளது. இதனால் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தடுப்பணைகள் சேதம் அடைந்துள்ளதால் விளை நிலங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீரை முழு அளவு சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் நீர்வளத்துறை ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். விவசாயிகள் கூறியதாவது:

ஆக்கிரமிப்பால் சுருங்கிய கண்மாய் சந்திரபிரகாஷ், விவசாயி, பி.அணைக்கரைப்பட்டி : இக்கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் அருகே உள்ள முத்துக்கோம்பை, சின்னமுடக்கு, பெரிய முடக்கு பகுதி விவசாயிகள் பயன் அடைவார்கள். கண்மாய் கரை உயர்த்தப்படாமலும், முட்செடிகள் வளர்ந்தும் உள்ளன. ஷட்டர், தடுப்பணை சேதம் அடைந்து கற்கள் பெயர்ந்தும் உள்ளது. 25 ஏக்கர் அளவிலான இக்கண்மாய் ஆக்கிரமிப்பால் 10 ஏக்கர் அளவு கூட இல்லாத நிலையில் சுருங்கி உள்ளது. இதனால் மழை நீரை முழுவதும் கண்மாயில் தேக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, கண்மாயை முறையாக சர்வே செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வார வேண்டும். இதனால் மழைநீர் முழு அளவு தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரும், நிலங்கள் பாசன வசதி பெறும். இங்கு இருந்து முறையாக பைப்லைன் அமைத்து, பம்பிங் செய்து அணைக்கரைப்பட்டிக்கு குடிநீராக வினியோகம் செய்திட நீர்வளத்துறை, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வே செய்தும் ஆக்கிரமிப்பு அகற்றவில்லை சதீஷ், விவசாயி, பி.அணைக்கரைப் பட்டி : இக்கண்மாயில் தண்ணீர் தேங்குவதன் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் பயன் அடைவார்கள். கண்மாயில் நீர் முழுவதும் தேங்கி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் நீர்வளத்துறை மூலம் கண்மாய் பகுதியை சர்வே செய்து சர்வே கற்கள் ஊன்றப்பட்டன . ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முன் வரவில்லை. இதனால் மழை நீரை முழுவதும் கண்மாயில் தேக்க முடியாத நிலையில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். முறையாக சர்வே செய்து ஆக்கிரமிப்பு அகற்றி, தடுப்பணைகள் அமைக்க வேண்டும். மழைநீர் வீணாகாத வகையில் தூர் வார நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us