ADDED : பிப் 04, 2024 03:37 AM
தேவதானப்பட்டி : சொந்த வீட்டில் குடியேறுவதில் தந்தை, மகனுக்கு ஏற்பட்ட பிரச்னையில் தந்தையை தள்ளிவிட்டதில் பலியானார்.
பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி பேட்டை தெருவைச் சேர்ந்தவர் முஸ்தபா 86. அதே ஊர் மேலத்தெருவில் இவரது மகன் இதயதுல்லா 39. இவரது தாயார் மற்றும் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக தாயார் இயற்கை உபாதைக்கு கழிவறை செல்லாமல் வீட்டிற்குள் இருந்து வந்தார். இதனால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய வற்புறுத்தியுள்னார். தனது தந்தை முஸ்தபா சொந்த வீட்டிற்கு இதயதுல்லா குடியேறுவதற்கு பொருட்களை கொண்டு சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்தபா, மரத்தில் இலையை அறுக்க பயன்படுத்தும் 'வாங்கருவாளை' எடுத்து சுத்தியபோது மகன் இதயதுல்லாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இதயதுல்லா, முஸ்தபாவை அடித்து தள்ளினார். இருவரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முஸ்தபா இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் இதயதுல்லாவை கைது செய்தனர்.