/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீசாரை அரிவாளால் மிரட்டியவர் கைது
/
போலீசாரை அரிவாளால் மிரட்டியவர் கைது
ADDED : அக் 24, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டியில் போலீசாரை அவதூறாக பேசி அரிவாளால் மிரட்டிய ரிசாத்ராஜ் யை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ., சந்தானக்குமார் தலைமையில் போலீசார்கள் வாலிராஜன், வினோத்
ஆகியோர் கெங்குவார்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப் பகுதியில் இருந்த சூசையப்பர் கிராமத்தைச் சேர்ந்த
ரிசாத்ராஜிடம் 30,யை விசாரித்தனர், அப்போது ரிசாத்ராஜ், போலீசாரை அவதூறாக பேசி மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி போலீசாரை வெட்டுவது போல் பாவனை செய்து மிரட்டினார்.
எஸ்.ஐ., வேல் மணிகண்டன், ரிசாத்ராஜை கைது செய்தார். ரிசாத்ராஜ் மீது தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் 20 வழக்குகள் உள்ளது.