ADDED : அக் 08, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் ஜே.ஆர்.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் 55. பெரியகுளம் வைகை அணை ரோட்டில் செல்வா டிம்பர்ஸ் மரக்கடை வைத்துள்ளார்.
இரவில் கடையை அடைத்து விட்டு காலையில் கடையை திறக்க சென்றபோது ஷட்டர் மற்றும் பூட்டின் மீது ஆயில் கொட்டி இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆரோக்கியதாஸ், கடையில் மாட்டியிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார். இதில் பெரியகுளம் காந்தி நகரைச் சேர்ந்த நாகராஜ் 38, என்பவர் பூட்டுக்கு ஆயில் ஊற்றி திருட முயன்றது தெரிந்தது. தென்கரை எஸ்.ஐ., ஜீவானந்தம், நாகராஜை கைது செய்தார்.