ADDED : செப் 28, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் அருகே வடுகபட்டி கன்னிமார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் 54. வீட்டருகே சிசிடிவி கேமரா வைத்துள்ளார்.
மேலும் சமுதாய கூடத்தில் சமூக விரோத செயல்களை தடுக்க பொதுமக்கள் நலன் கருதி சிசிடிவி கேமரா வைத்துள்ளார்.
வள்ளுவர் தெருவைச் சேர்ந்த தினேஷ்குமார் 25. இவரது நண்பர் தினேஷ் 25. இருவரும் சமுதாயக் கூடத்தில் கேமராவை கற்களால் எறிந்து சேதப்படுத்தினர். பாஸ்கரன் சத்தமிட்டுள்ளார். அதற்கு இருவரும் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். தென்கரை போலீசார் தினேஷ்குமாரை கைது செய்து, தினேஷை தேடி வருகின்றனர்.