/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வருவாய்த்துறையினர் தொடரும் காத்திருப்பு
/
வருவாய்த்துறையினர் தொடரும் காத்திருப்பு
ADDED : மார் 06, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தமிழகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில்,' காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி' பிப்.,27 முதல் காலவரயைற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத் தொடர்கின்றனர். இப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சுரேந்திரன், இணைச்செயலாளர்கள் ஒச்சாத்தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

