sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள்

/

கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள்

கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள்

கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள்


ADDED : ஜன 25, 2024 06:03 AM

Google News

ADDED : ஜன 25, 2024 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: போடி ஒன்றியம் தேவாரம் அமராவதி நகர் தங்கவேல் மனைவி சரணமணி 46. அதேப்பகுதி சடையாண்டி 42. இருவரும் கேரளா ஏலதோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும்போது பழக்கம் ஏற்பட்டது. சரணமணியிடம், சடையாண்டி ரூ.40 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

கடனை திருப்பிக் கொடுக்காததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. 2018 ஆகஸ்ட் 3ல் சரணமணியின் வீட்டிற்குள் சடையாண்டி நுழைந்து, தகராறு செய்து தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்தார். வீட்டில் இருந்த எட்டே முக்கால் பவுன் தங்க நகையை திருடி சென்றார். கோட்டூர் கார்த்திகை செல்வி, தனது மூத்த சகோதரியை சரணமணியை அலைபேசியில் தொடர்பு கொண்ட பதில் இல்லை.

சந்தேகம் அடைந்த கார்த்திகை செல்வி, அவரது வீட்டில் சென்று பார்த்த போது சரணமணி இறந்து கிடந்தார். போடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி, சடையாண்டியை கைது செய்து, விசாரணையில் திருடிய நகையை வங்கியில் அடகு வைத்து பணத்தை செலவழித்தது தெரிந்தது. இவ்வழக்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அரசு தரப்பு வழக்கறிஞராக சுகுமாறன் ஆஜரானார். விசாரணை முடிந்து நேற்று நீதிபதி கோபிநாதன், குற்றவாளி சடையாண்டி கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், நகையை திருடிச் சென்ற குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us