ADDED : ஜன 21, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ஆண்டிப்பட்டி பூக்காரத்தெரு முருகன் 43, மிட்டாய் கடை வைத்துள்ளார். ஜன.,19 அதிகாலை மிட்டாய் கடை கதவு உடைக்கப்பட்டுள்ளதாக கடைவீதி வாட்ச்மேன் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட கொத்தப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
விசாரணையில் அச்சிறுவனுக்கு மதுரை ரோட்டில் டிச.,30ல் திருட்டிலும், கடற்கரை நாடார் தெருவில் ஜன.,13ல் கடைகளில் நடந்த கொள்ளை முயற்சிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

