ADDED : ஆக 06, 2025 08:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகே குண்டளை எஸ்டேட், ஈஸ்ட் டிவிஷனில் முருகன் கோயில் வளாகத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு கோயில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் உண்டியலை தூக்கிச் சென்றும், ஒன்றரை பவுன் தங்க நகைகளையும் திருடிச் சென்றனர்.
உண்டியலில் ரூ.15 ஆயிரம் வரை இருக்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். நிர்வாகிகள் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.