ADDED : செப் 28, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு : கண்டமனூர் நாடார் தெருவை சேர்ந்த விவசாயி பாலகுருசாமி 87. தனது நிலத்தில் விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் கையால் இயக்கும் உழவு மிஷினை மூன்று நாட்களுக்கு முன் பயன்படுத்தி விட்டு, பட்டுப்பூச்சி வளர்க்கும் தனது மையத்தில் இரவில் நிறுத்தி சென்றார்.
மறுநாள் சென்று பார்த்த போது உழவு இயந்திரத்தை யாரோ திருடி சென்று விட்டனர்.
அப்பகுதியில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பால குருசாமி புகாரில் கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.