sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவை புறக்கணிக்கும் தேனி கல்வித்துறை

/

ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவை புறக்கணிக்கும் தேனி கல்வித்துறை

ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவை புறக்கணிக்கும் தேனி கல்வித்துறை

ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவை புறக்கணிக்கும் தேனி கல்வித்துறை


ADDED : அக் 29, 2025 09:26 AM

Google News

ADDED : அக் 29, 2025 09:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: அரசு பொதுத்தேர்வில் நுாறுசதவீதம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தேனி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாதது வருத்தமளிப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் அரசுபொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வைக்கும் ஆசிரியர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப் படுகிறது. இந்த விழா மாவட்டம் வாரியாகவும் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். ஆனால் தேனி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறை அதிகாரிகள் இந்த பாராட்டு விழாவை நடத்தாமல் புறக்கணிப்பதால் ஆசிரியர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

இதுபற்றி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், அருகில் உள்ள மாவட்டங்களில் பாராட்டு விழாக்கள் நடத்தி ஆசிரியர்களை ஊக்கப்படுத்துகின்றனர்.

தேனியில் சான்றிதழ்கள் தயார் செய்தும் விழா நடத்துவதை கடந்த ஆண்டுகளில் கல்வித்துறையினர் தவிர்த்து விட்டனர்.

தேர்ச்சி சதவீதம் குறைந்தால், ஏன் குறைந்தது என கேட்கும் அதிகாரிகள், நுாறுசதவீத தேர்ச்சி பெற வைத்தால் ஊக்கப்படுத்துவதில்லை. எதிர் வரும் ஆண்டுகளிலாவது ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விழாக்கள் நடத்த வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us