sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனியில் சுகாதார பணிக்கு போதிய பணியாளர்கள், வாகனங்கள்  இன்றி தவிப்பு

/

தேனியில் சுகாதார பணிக்கு போதிய பணியாளர்கள், வாகனங்கள்  இன்றி தவிப்பு

தேனியில் சுகாதார பணிக்கு போதிய பணியாளர்கள், வாகனங்கள்  இன்றி தவிப்பு

தேனியில் சுகாதார பணிக்கு போதிய பணியாளர்கள், வாகனங்கள்  இன்றி தவிப்பு


ADDED : ஜூலை 19, 2025 11:55 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி நகராட்சியில் துாய்மை பணிகள் மேற்கொள்ள போதிய பணியாளர்கள் வாகனங்கள் இன்றி தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதனை 5 டிவிஷன்களாக பிரித்து துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிரந்தர பணியாளர்கள் சுமார் 50 பேர் உள்ளனர். இவர்களை வைத்து கழிவு நீர் கால்வாய் சுத்தப்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இது தவிர வீடுகளில் குப்பை சேகரித்தல், குப்பை பிரித்தல் உள்ளிட்ட பணிகள் தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப் பணியில் 140க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்க வேண்டும்.

ஆனால், தனியார் நிறுவனம் தினமும் 100 பணியாளர்களை மட்டும் ஈடுபடுத்துவால் நகர்பகுதியில் பல இடங்களில் சுகாதாரப்பணிகள் தேக்கமடைகின்றன.

அதே நேரம் போதிய வாகனங்கள் இல்லாதாதல் குப்பையை நுண்ணுரம் செயலாக்க மையம், தப்புக்குண்டுவில் உள்ள கிடங்கிற்கு கொண்டு செல்வதில் சிரமம் நிலவுகிறது.

நகர்பகுதியில் குப்பையை பிரித்து ஒரே வாகனத்தில் மக்கும், மக்காத குப்பையை ஏற்றி தப்புக்குண்டுவிற்கு கொண்டு சென்று அங்கு மக்காத குப்பையை கொட்டுகின்றனர்.

பின்னர் அங்கிருந்து மக்கும் குப்பையை நுண்ணுர செயலாக்க மையத்திற்கு கொண்டு வருகின்றனர். தனியார் நிறுவனம் கூடுதல் பணியாளர்கள், வாகனங்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






      Dinamalar
      Follow us